கோவை: சிறுவாணி அணையில் நீர் மட்டம் 38.28 அடியாக உயர்வு !
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் 17 அடிக்கு கீழ் இருந்த நீர்மட்டம், இன்று 38.28 அடியாக உயர்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைக்கு நீர்சேகரிப்பு அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து தினசரி 82.31 எம்.எல்.டி. தண்ணீர் கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மழை தொடருமானால், அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குடிநீர் விநியோகத்தில் மேலும் உயர்வுக்கு வழிவகுக்கும்.
Next Story



