வெள்ளகோவிலில் ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, விளாத்திகுளம், தேவத்தூர், அம்பியம்பட்டி, அருள்புரம், மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 99 விவசாயிகள் 881 மூட்டைகளில் 46 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளக்கோவில், முத்தூர், சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி, மூலனூர்,அவல்பூந்துறை ஆகிய பகுதியைச் சேர்ந்த 14 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்கு வந்திருந்தனர். அதன்படி தேங்காய் பருப்பு கிலோ ரூ.60.39 முதல் ரூ.94.19 வரை விற்பனையானது. மொத்தம் ரூ. 38.91 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
Next Story