ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-வது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா

ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-வது  வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா
பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-வது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை கிராம தேவதையும் குல தேவதையுமான கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு 4-வது ஆடி வெள்ளிக்கிழமையான இன்று காலை குளக்கரையில் இருந்து கரகத்துடன் அம்மனை அழைத்து வந்தனர். கோயிலின் அருகே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலின் குளக்கரையில் குலதெய்வத்தை வழிபடும் விதமாக பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர. இந்த விழாவில் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை பாண்டிச்சேரி கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story