வெறிநாய் கடித்து 4 பேர் காயம்!

வெறிநாய் கடித்து 4 பேர் காயம்!
பொது பிரச்சனைகள்
கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரி கின்றன. இவை அவ்வப்போது ரோட்டில் நடந்து செல்வோரை துரத்தி வந்தன. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் காவியா (13),ரூபா (13) மற்றும் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(82), ராஜசேகர்(28) ஆகிய 4 பேரை வெறிநாய்கள் துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த காவியா ஆலங்குடி அரசு மருத்துவமனையிலும், ரூபா, ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதே போல் ஆடுகளையும் தெருநாய்கள் கடித்து குதறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story