ராசிபுரம் அருகே தமிழரசன் என்ற கூலித்தொழிலாளி மரணம் பெண் உட்பட 4 பேரிடம் நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை
Rasipuram King 24x7 |31 Aug 2024 3:10 PM GMT
ராசிபுரம் அருகே தமிழரசன் என்ற கூலித்தொழிலாளி மரணம் பெண் உட்பட 4 பேரிடம் நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு பகுதியில் தமிழரசன் என்ற கூலித்தொழிலாளியை அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் தழிழரசன் உயிரிழிப்பு: பெண் உட்பட 4 பேரிடம் நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் தமிழரசன், 50, கூலித்தொழிலாளி. இவர் போதையில் இதேப்பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லோகநாதன், 49 என்பரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், லோகநாதன் மற்றும் உறவினர்கள், 3 பேர் தமிழரசனிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு கை கலப்பாக மாறியது. இதில் லோகநாதன் மற்றும் உறவினர்கள் தமிழரசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story