இலுப்பூர் : பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் பொது இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக இலுப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராம்ஜீ, சொக்கலிங்கம், ராஜா, பால்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் சீட்டு கட்டுகள் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story

