இரணியல் 4 வழிச்சாலையில் வாலிபர்கள் பைக் ரேஸ் - தம்பதி படுகாயம்
Nagercoil King 24x7 |9 Sep 2024 12:29 PM GMT
வழக்கு பதிவு
குமரியில் தற்போது நான்கு வழி சாலை பணிகள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் சில பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலையை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே விசாலமாக உள்ள இந்த சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ரீல்ஸ் எடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையும் மனக்கரை நான்கு வழிச்சாலைக்கு பைக்கில் வந்த வாலிபர்கள் சிலர் பைக் ரேஸில் நடத்தி ரீல்ஸ் எடுத்துள்ளனர். சீறிப்பாய்ந்த பைக்குகளில் ஒருவரை ஒருவர் முந்தி சென்றதாக தெரிகிறது. அப்போது ஒரு பைக் முன்னாள் சென்ற பைக் மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு பைக்குகளும் இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் முன்னால் சென்ற பைக்கில் பயணித்த தம்பதியரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சி ஆர் பி எப் வீரர் ராஜன் (47), அவரது மனைவி ஹேமா (42) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை அக்கம் பக்கம் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை சேர்த்தனர். விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த வாலிபர் வினோத் என்பவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story