அடையபலம் ஏரியில் 4 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி
Arani King 24x7 |17 Sep 2024 2:45 PM GMT
ஆரணி, செப் 17. ஆரணி அடுத்த அடையபலம் ஓடைத்தாங்கல் ஏரியில் 4 சிறுவர்கள் ஏரியில் விளையாட சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
ஆரணி அடுத்த அடையபலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி-அஞ்சலி தம்பதியரின் மகன் மோகன்ராஜ்(13) 8ம்வகுப்பு பயின்று வருகிறார். மகள் வர்ஷா(9) 4ம் வகுப்பு பயின்று வருகிறார். விநாயகம்-செல்வி தம்பதியின் மகள்கள் கார்த்திகா(8) என்பவர் 3ம் வகுப்பும், மற்றொரு மகள் தனுஷ்கா(4) அங்கன்வாடியில் பயின்று வருகிறார். 4 பேரும் சேர்ந்து அடையபலம் ஓடைத்தாங்கல் ஏரியில் விளையாட சென்றனர். அப்போது தவறி ஒரு குழந்தை ஏரியில் மூழ்கி உள்ளது. அக்குழந்தையை காப்பாற்ற 3 பேரும் சேர்ந்து ஏரியில் இறங்கியுள்ளனர். அப்போது 4 பேரும் ஏரியில் மூழ்கி இறந்தனர். மேலும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஆரணி கிராமிய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐக்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அடையபலம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
Next Story