மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் : 4 இளம்பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் : 4 இளம்பெண்கள் மீட்பு
தூத்துக்குடியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் உள்ள குறிப்பிட்ட ஒரு மசாஜ் சென்டரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களையும் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story