ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் இளைஞர் கைது*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் இளைஞர் கைது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த பொன்ராஜ்(22) என்பவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உணவு மற்றும் குடிநீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் மான் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடப்படுவதாக விவசாயிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மம்சாபுரம் வாலாங்குளம் கண்வாய் பகுதியில் சார்பு ஆய்வாளர் பாரதிராஜா தலைமையிலான போலீஸார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரை கண்டதும் வந்த வழியே தப்பி ஓட முயன்ற மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ்(22) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த கைப்பையில் கொய்யாப்பழங்கள் மற்றும் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. விசாரணையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்தது தெரிய வந்தது அடுத்து பொன்ராஜூவை கைது செய்த போலீஸார், நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

