மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி...*

மகா  சிவராத்திரி மற்றும் அமாவாசையை  முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல  4  நாட்கள் அனுமதி...*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது .இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது ... இந்த நிலையில் மகாலய சிவராத்திரிக்கு விடிய விடிய பூஜை நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .மேலும் அன்று பக்தர்கள் கோயில் மலைப் பகுதியில் தங்கி வழிபடுவார்கள் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மகா சிவராத்திரிக்கு மட்டும் கூடுதலாக நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story