பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் 4 நாட்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் 4 நாட்கள் ரத்து
X
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஜோலார்பேட்டையில் சிக்னலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு -ஜோலார்பேட்டை ரெயில் (56108) இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள், வருகிற 1, 2 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூருக்கு மட்டும் இயக்கப்படும், இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (56107) இன்று, 25, வருகிற 1 ,2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருப்பத்தூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story