குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்..

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-IV (Group 4) தேர்வில் தெரிவு கிராம நிருவாக அலுவலராக செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது… பணிநியமன ஆணை பெற்ற அனைத்து பணியாளர்களும், 100 சதவீதம் உண்மையாகவும், நேர்மையாகவும் அரசு பணியினை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் முனைப்புடன் வழங்குவதில், பணியில் உங்கள் திறன்களை வளர்ந்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர்கள் பதவிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-IV (தொகுதி IV)க்கான 2023-2024ஆம் ஆண்டுக்கான தேர்வு 09.06.2024 நடைபெற்றதில், கிராம நிருவாக அலுவலராக தெரிவு செய்யப்பட்ட 70 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் வழங்கினார்கள். இதில், மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்கு 46 நபர்களும், திருவாரூர் வருவாய் கோட்டத்திற்கு 24 நபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர்கள் யோகேஸ்வரன் (மன்னார்குடி), சங்கர் (பொறுப்பு) (திருவாரூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

