ஏரிகளை தூர்வாரி தூய்மைபடுத்துவதுடன் தூர்நதூர்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

X
அரியலூர், மே.20 - ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வாரி தூய்மைபடுத்துவதுடன் தூர்நதூர்ந்து போன பொன்னேரி 4 வாய்க்கால்களையும் சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க விரிவடைந்த மாவட்டக்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜெ.வரப்பிரசாதம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் மற்றும் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.தியாகராஜன், ஒன்றிய தலைவர் எம்.மகேந்திரன், ஒன்றிய பொருளாளர் பி.ஆர்.தனவேல், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ஆர்.இளவரசன், ஒன்றிய நிர்வாகிகள் ஜி.பெரியசாமி, ராமமூர்த்தி, ஜெயராமன், எல்.துரைராஜ் திருமானூர் ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், காமராஜ், சுந்தரமூர்த்தி, செந்துறை வட்ட நிர்வாகிகள் சீமான், செல்வராசு, தா.பழுர் க.வேம்பு, பல்கீஸ், ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் .வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பொன்னேரி, சுக்கிரன் ஏரி, கண்டார தித்தம் ஏரி, பாண்டியன் ஏரி, உட்கோட்டை விளாங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி பாசன வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைப்பெறும் ஜமாபந்தியில் விவசாயிகளின் நிலப்பட்டா குளறுப்படி இல்லாமல் வழங்கிட லஞ்சம் பெறாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொன்னேரியில் உள்ள நான்கு வாய்க்கால்களும் துந்துபோய் இருப்பதால் சீர்படுத்தி விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 60 வயது முடிந்த விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் முதியோர் உதவி கிடைத்திட வேண்டும். மேலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். மே 31க்குள் சங்க உறுப்பினர் பதிவு கிராமங்களில் செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் ஜி.பெரியசாமி கூறினார்.
Next Story

