விபத்து : தந்தை பலி - 4 வயது மகன் படுகாயம்

X
குமரி நம்பாளி பகுதியை சேர்ந்தவர் ஜோணி (39). நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் ஜோணி தனது நான்கரை வயது மகன் ஜோண்வின் அகஸ்டினோ என்பவரை பைக்கின் முன் பகுதியில் உட்கார வைத்து வேங்கோடு பகுதியிலுள்ள தனது மனைவி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பைக் மூன்றுமுக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டெம்போ ஒன்று ஜோணியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஜோணி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் ஆபத்தான நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஜோனியின் மனைவி ஷைஜா (33) என்பவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புதுக்கடை காவல் ஆய்வாளர் இசக்கிதுரை (பொ) வழக்கு பதிவு செய்து ஜோணி உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்கு பதிவு செய்து டெம்போவை கவனக்குறைவாக ஓட்டி வந்த நட்டாலம் பகுதி சேர்ந்த லிஜோசிங் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

