சத்தீஸ்கர் மாநிலத்தில் திருப்பத்தூர் பகுதியைஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருப்பத்தூர் பகுதியைஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!
X
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருப்பத்தூர் பகுதியைஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன் மனைவி குழந்தைகள் உட்பட நான்கு பேர் பரிதாப உயிரிழப்பு! உடலைக் கொண்டு வரும் பணிகள் தீவிரம்! கதறி துடித்த உறவினர்கள்! திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வருகிறார் இந்த நிலையில் ராஜேஷ்குமாரை திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக நேற்று சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சொந்த ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த மாருதி டிசையர் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் உடல் திருப்பத்தூர் வந்து அடையும் எனவும் கூறப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
Next Story