மொச்ச கொட்ட பாளையம்-டூ வீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத 4-வீலர் மோதி விபத்து.
மொச்ச கொட்ட பாளையம்-டூ வீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத 4-வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பவித்திரம் அருகே கொளஞ்சிகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய வயது 50. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:40 மணியளவில் கரூர் - கோவை சாலையில் டூவீலரில் சென்றார். இவரது வாகனம் மொச்ச கொட்ட பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று சுப்பிரமணி டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் உறவினர் நேசமணி வயது 33 என்பவர் அளித்த புகாரில் கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




