கருங்கல் :4 வயது சிறுமி திடீர் சாவு

கருங்கல் :4 வயது சிறுமி திடீர் சாவு
X
சுகாதார துறை ஆய்வு
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ் ( 35) கூலி தொழிலாளி.  இவரது மகள் ஜோஸ்மிகா( 4 ). அரசு பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. நேற்று ஜெகன் ஜோஸ் மகளை தோளில் படுக்க வைத்து இருந்த போது குழந்தை திடீரென இறந்துள்ளது. இது குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குழந்தையை குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுகாதாரத் துறையினரும் சம்மந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
Next Story