மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!

X
தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க கூடிய விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இன்று நான்காவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர கடற் பகுதியான மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்பதால் வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா கடல் பகுதி, குமரி கடல் பகுதியில் பலத்த காற்றானது 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வேகமாக வீச கூடும் என்பதால் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மைய எச்சரிக்கை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத் துறை சார்பில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆள்கடலுக்குச் செல்லக்கூடிய நாட்டு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக சுமார் 20000 மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது கரைப்பகுதியில் அருகே மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வருகின்றனர்
Next Story

