குமரியில் 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு - திருத்த முகாம்

குமரியில் 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு - திருத்த முகாம்
பைல் படம்
குமரியில் 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நடைபெற்றது.

தபால்துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோவில் தலைமை தபால் நிலையம், தக்கலை தலைமை தபால் நிலையம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி, அருமனை, ஆசாரிபள்ளம், அழகியபாண்டியபுரம், அழகப்பபுரம், பூதப்பாண்டி, குளச்சல், ஈத்தாமொழி, இடைக்கோடு, களியக்காவிளை, கன்னியாகுமரி, காப்புக்காடு,

கருங்கல், காட்டாத்துறை, கொல்லங் கோடு, கோட்டார், கொட்டாரம், குலசேகரம், குழித்துறை, மணவா ளக்குறிச்சி, மார்த் தாண்டம், மேக்காமண்டபம், முளகுமூடு, நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதி, நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நெய்யூர், பாலப்பள்ளம், பளுகல், புதுக்கடை, புத்தளம், எஸ்.டி.மாங்காடு, சுசீந்திரம், திக்கணங்கோடு,

திருவிதாங் கோடு, வெட்டூர்ணிமடம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட 40 தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. காலை முதல் மாலை வரை இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவை தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 04652-232032, 232033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story