காவலாளியை கட்டிப்போட்டு ₹40 லட்சம் பணம் கொள்ளை

காவலாளியை கட்டிப்போட்டு ₹40 லட்சம் பணம்  கொள்ளை
X
திருச்சி பொன்னகர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் காவலாளியை கட்டிப்போட்டு ₹40 லட்சம் பணம் கொள்ளை.
திருச்சி பொன்னகர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் காவலாளியை கட்டிப்போட்டு ₹40 லட்சம் பணம் கொள்ளை. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65) தொழிலதிபரான இவர் ஒப்பந்தக்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருச்சி கருமண்டபம் அருகே உள்ள பொன் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் சொந்தமாக பங்களா உள்ளது. இந்நிலையில் உறவினர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த காரணத்தால் அவருடைய துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சண்முகம் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு ஒரத்தநாடு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பங்களாவிற்கு வெளியே காவலாளி காமராஜ் என்பவர் வீட்டை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கொள்ளை கும்பல் சிலர் வீட்டுக்குள் கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி காமராஜ் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தாக தெரிகிறது. ஆனால் கொள்ளை கும்பல் காவலாளியை தாக்கி அவரது இரண்டு கை, கால்கள் மற்றும் வாயை கயிற்றால் கட்டி விட்டு ஓரமாக அமர வைத்துவிட்டு அங்கிருந்து சென்று வீட்டின் உள்ளே சென்றனர். விட்டின் அறையில் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து நகை பணத்தை திருடி சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு வந்த சண்முகத்தின் மனைவி காவலாளி வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு உள்ளே சென்று காவலாளியை தேடிய பொழுது காவலாளி ஒரு இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி மயங்கி விழுந்து கிடந்தார். இதை அடுத்து அந்த காவலாளியை அவர் எழுப்பியுள்ளார். பிறகு எழுந்த காவலாளி நள்ளிரவு நடந்தகொள்ளை சம்பவத்தை கூறியுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சண்முகத்தின் மனைவி உடனடியாக ஒரத்தநாட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் காலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுவீடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் ஒரத்தநாட்டில் இருக்கும் சண்முகத்திற்கு தகவல் தெரிந்து அவர் வீட்டிற்கு உடனடியாக விரைந்துள்ளார்.வீட்டில் இருந்த நகை பணம் எவ்வளவு திருட்டு போனது என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை சுமார்₹40லட்சம் பணம் கொள்ளை போனதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .இந்த கொள்ளை சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புத்தாண்டு தினத்தில் திருச்சி மாநகரில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொன்நகர் பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story