இடிகரை பகுதியில் நகை திருட்டு – 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது !

X
கோவை மாவட்டம் இடிகரை பகுதியில், இரண்டு வீடுகளில் நடந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிநகர் மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (44) மற்றும் அங்காளம்மன் புரம் மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்த இளைய பல்லவன் (34) ஆகிய இருவரது வீடுகளிலும் கதவுகள் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டன. இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட இடிகரை போலீசார், திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 பவுன் (2½ பவுன்) தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலுக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்..
Next Story

