ஒசூர்: 400 கிலோ புகையிலைப் பொருள் கடத்த முயன்றவருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் ராயக்கோட்டை சாலைப்பிரிவி அருகே நகர போலீசார் வாகனச் தணிக்கையில் நேற்று ஆடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஈச்சா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த லாரியில் குட்கா மூட்டைகளைப் பதுக்கி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைஅடுத்து லாரியை டிரைவரை விசாரணை செய்ததில் அவர் கா்நாடக மாநிலம், தும்கூரைச் சோ்ந்த நரசிம்மராஜுவை (41) என்பதும் கா்நாடகத்திலிருந்து ஒசூா் வழியாக கோவைக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ குட்கா மூட்டைகளைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் நரசிம்மராஜுவை கைது செய்து லாரி மற்றும் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.
Next Story

