சேலம் கந்தம்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்

சேலம் கந்தம்பட்டி அருகே சரக்கு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்
X
இதுதொடர்பாக வாலிபர் கைது
சேலத்தில் சரக்கு வேனில் குட்கா கடத்துவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர்கள் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து போலீசார் மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கந்தம்பட்டி பைபாஸ் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் இருந்த மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அதில் குட்கா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த உஜ்வர் சிங் (வயது 26) என்பதும், குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 400 கிலோ குட்கா மற்றும் சரக்கு வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story