ஆரணியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

ஆரணி, செப்.20. ஆரணி மாங்கா மரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதில் ஆரணி கோட்டாட்சியர் பங்கேற்றார்.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் 41 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆரணி மாங்கா மரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் கோ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. சங்க முன்னாள் பொருளாளர் சுசீலா, துணைத் தலைவர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பி.ரேணுகோபால் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ராமதாஸ் ஆண்டறிக்கை வாசித்து வரவு - செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எஸ். பாலசுப்பிரமணியன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், மாவட்ட கருவூலக அலுவலர் தீபாவதி, ஆரணி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சர்வன்குமார், உதவி மேலாளர் இளங்கோ, சேவூர் கிளை மேலாளர் ஜனனி, கண்ணமங்கலம் கிளை மேலாளர் கிரிதரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் தாட்சாயணி , ஆரணி கருவூலக அலுவலர் தஞ்சியம்மாள் ,கூடுதல் உதவி கருவூல அலுவலர் மேகலா, வட்டார கல்வி அலுவலர்கள் எஸ். கமலக்கண்ணன், பி. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்து சிறப்பித்து பேசினார்கள். மேலும் பொதுக்குழு கூட்டத்தில் 41வது ஆண்டு நினைவு நூல் வெளியிடப்பட்டது . மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கமலநாதன் , மாவட்ட துணை தலைவர்கள் அப்துல் காதர் , அன்பழகன் ,மாவட்ட இணைச் செயலாளர் அருளப்பன் மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தரமூர்த்தி , மாவட்ட பிரச்சார செயலாளர் துரைசாமி , மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார். முடிவில் ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Next Story