திருச்சியில் கல்லூரி மாணவனை தாக்கிய ரவுடி கைது!!

திருச்சியில் கல்லூரி மாணவனை தாக்கிய ரவுடி கைது!!
X
சமூக வழங்குதலங்களில் பதிவிடு பிரித்து ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை செல்வா நகர் இரண்டாவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சாய் செந்தில் (19). இவர் தனியார் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் இவருடைய நண்பர் அர்பான் என்பவருக்கும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று சாய் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சமயபுரம் செல்வதற்காக காந்திபுரம் பகுதியில் டீக்கடைக்கு வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது இதில் அவரது நண்பர்கள் மற்றும் ஒரு மர்ம நபர் செந்திலை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த செந்திலை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து சாய் செந்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற ரவுடியை கைது செய்தனர் மேலும் பரத் கார்த்தி என்கிற இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story