தஞ்சை மாநகராட்சி சார்பில் 4181 சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் : மேயர் சண்.ராமநாதன் பெருமிதம்
Thanjavur King 24x7 |12 Dec 2025 9:41 PM ISTசாலையோர வியாபாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் , டிச.12- தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவது : தமிழ்நாடு முதல்வர் , துணை முதல்வர் வழிகாட்டுதலோடு 'தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதில் முதலில் ரூ. 10,000/- மும் அந்த கடன் முடிவுற்றபிறகு 25000/- மும் அதன்பிறகு ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2929 சாலையோர வியாபாரிகள் ரூ. 10,000 மும்,1035 சாலையோர வியாபாரிகள் ரூ. 25,000 மும், 217 சாலையோர வியாபாரிகள் ரூ. 50,000 மும் மொத்தம் 4,181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளார்கள். மேலும் அவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அவர்களது நலன் கருதி குழுக்கள் அமைக்கப்பட்டு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் வருகிறது. மேலும், மேயராக மாநகராட்சியால் செய்யப்பட்டிருந்த விதி 270 வசூல்-ன் கீழ் சாலையோர கடைகளுக்கான தொகையினை தினந்தோறும் வசூல் செய்வதனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் சாலையோர கடைகளுக்கு எவ்விதமான தொகையும் வசூல் செய்யப்படாது . சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அனுகி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story


