இலங்கைக்கு கடத்தல் இருந்த 42 லட்ச ரூபாய் மதிப்பிலான பீடிஇலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தல் இருந்த 42 லட்ச ரூபாய் மதிப்பிலான பீடிஇலைகள் பறிமுதல்
X
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் க்யூ பிரிவு காவல்துறை நடவடிக்கை படகுடன் தப்பியோடிய கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 42 மூட்டை பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் க்யூ பிரிவு காவல்துறை நடவடிக்கை படகுடன் தப்பியோடிய கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தூத்துக்குடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு அவ்வப்போது போதை மாத்திரைகள், பீடி இலைகள், மஞ்சள், அழகு சாதன பொருட்கள் ,பட்டாசுகள் ,உரம் உள்ளிட்டவை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது இதை தடுக்க காவல்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை மற்றும் க்யூ பிரிவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு இன்று அதிகாலை தூத்துக்குடி திரேஸ் புரம் கடல் பகுதி வழியாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான காவல்துறையினர் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சோதனை செய்தனர் இதில் அங்கு படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 30 கிலோ பண்டல்களாக இருந்த 42 மூடை பீடி இலைகளை பறிமுதல் செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் காவல்துறையை கண்டதும் படகும் மூலம் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட உள்ளது
Next Story