ஆவடி அருகே வீட்டின் பூட்டுடைத்து 45 சவரன் திருட்டு

ஆவடி அருகே வீட்டின் பூட்டுடைத்து 45 சவரன் திருட்டு

கோப்பு படம் 

ஆவடி அருகே வீட்டின் பூட்டு உடைத்து 45 சவரன் திருட்டு

ஆவடி அடுத்த பட்டாபிராம், நெமிலிச்சேரி, தேவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவரது மனைவி லாவண்யா, 25. இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுடன், மணிகண்டனின் பெற்றோர் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம், இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது பெற்றோர் அருகிலுள்ள மகள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரவு, மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 45 சவரன் நகை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story