ராமநாதபுரம் 45 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருவாடானை அருகே 405 ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்கள் பறிமுதல்:  மீன் பிடிக்க பயன்படுத்த வாங்கி வந்த போது சாலையில் தவறவிட்டு சென்றது விசாரணையில் தகவல் ஒருவருக்கு போலீஸ் வலை வீச்சு
திருவாடானை அடுத்த ஓரியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களை எஸ் பி பட்டிணம் போலீசார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் வாங்கி வந்த போது சாலையில் தவற விட்டு சென்றது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக  தொண்டி புது குடியைச் சேர்ந்த   ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி,  மோர் பண்ணை,  திருவாடானை,  எஸ் பி பட்டினம்,  சோழியாக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில்  சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அப்பகுதி மீனவர்கள் சிலர் ஜெலட்டின் வெடி பொருட்களை பயன்படுத்தி கடலில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.       இவ்வாறு சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது  மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்த வரும் நிலையில் தொடர்ந்து சில மீனவர்கள் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத  மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொண்டி புதுக் குடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற மீனவர் நேற்று இரவு; ஜெலட்டின் டெட்டனேட்டர் மற்றும் வயர் உள்ளிட்டவற்றை மீன்பிடி தொழிலுக்காக வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது  வெடி பொருட்கள் அடங்கிய பையை சாலையில் தவறி விழுந்தது. இதையடுத்து அதை எடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் செந்தில்குமார் வந்த போது அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த பையை எடுத்து சோதனை செய்து கொண்டிருப்பதை  கண்ட செந்தில்குமார் அங்கிருந்து தப்பினார். போலீசார் பையை  சோதனை செய்த போது  405 ஜெலட்டின் குச்சிகளும் அதற்கு பயன்படுத்தப்படும் 405 டெட்டனேட்டர்கள் வெடி பொருட்கள்  மற்றும் மூன்று கிலோ ஒயர் உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெடி பொருட்களை அடங்கிய பையை பறிமுதல் செய்த எஸ்பி பட்டினம் காவல் நிலைய போலீசார் அதனை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இந்த வெடி பொருட்கள் அனைத்தும் கடலில் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்துவதற்காக வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் வெடி பொருட்களை வாங்கி வந்த தொண்டி புது குடியைச் சேர்ந்த செந்தில்குமார் தலைமறைவானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story