ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோவிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்வு விழா

500-ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோவிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்வு விழா
500-ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோவிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்வு விழா செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பழையனூர் கிராமத்தில் 500- ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோவிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை நிகழ்வு விழாவை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம் மற்றும் 108 பால்குட அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த 108 பால்குடமானது ஸ்ரீ பிடாரி தேளி அம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் பால்குடம் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ மாகாளீஸ்வரர்க்கு பால் அபிஷேகம் மற்றும் சங்க அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story