ஸ்ரீ கிளியாருடைய அய்யனார் கோவில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஸ்ரீ சுவாமி திருக்கோவில் 48ம் நாள் மண்டல பூஜை

1000 க்கும் மேற்பட்டோர்க்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
சாமநத்தம் அருகே பொட்ட பாளையம் முத்துலாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிளியாருடைய அய்யனார் கோவில் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஸ்ரீ சுவாமி திருக்கோவில் 48ம் நாள் மண்டல பூஜை தலைவர் அகிலாராணிகிளியன், செயலாளர் கிளியன், பொருளாளர் மூக்கையா, தர்மபுரி டிஎஸ்பி சிவராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story