செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு

பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு
பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 48 பேர் மீட்பு சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே வயலாநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக இ-மெயில் திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவிக்கு வந்த புகாரின் அடிப்படையில் நேரடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் சென்று செங்கல் சூளையில் ஆய்வு செய்த போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களாக வேலை பார்த்து வந்த 48 பேரை மீட்டு பாரிவாக்கத்தில் உள்ள சமுதாய நல மையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஜனவரி மாதம் ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் கொடுத்து செங்கல் சூளையில் பனி புரிய அனுப்பியதாகவும் இங்கு வந்த பிறகுதான் கொத்தடிமைகளாக அவர்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் வாரம் ரூ.200 மட்டும் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 48 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி அவர்களது வங்கி கணக்கில் அரசு சார்பில் ஒருவருக்கு தலா முப்பதாயிரம் வீதம் செலுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பகுதியில் இது போல் வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story