மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.3.97 இைட்சம் மதிப்பீட்டில் அரசு நைத்திட்ட உதவிகலை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்மாவட்ட ஆட்சியர் து தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 546 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பில் ஆட்டோ மானியம், 5 பயனாளிக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ கல்வி நிதியுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.47,250/- மதிப்பில் சக்கர நாற்காலிகளையும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலகில் பணியாற்றி பணியின்போது, உயிரிழந்த ஊராட்சி செயலர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஈப்பு ஓட்டுநரின் வாரிசுதாரர்கள் 5 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கினார்.நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கிக்கு ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பு சார்பில் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனை தேவைக்காக தன்னார்வத்துடன் இரத்த தானம் வழங்கி வருகிறார்கள். இதில் அதிகளவில் இரத்த தான முகாம் அமைத்து கொடுத்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கா.ப.அருளரசு பாராட்டி மாவட்ட ஆட்சியர் கேடயத்தினை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) கே.பி.இந்தியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி, ரெட் கிராஸ் செயலர் .சி.ஆர்.இராஜேஸ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story