நாமகிரிபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளுக்கு ரூ.48.63 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.பி கே.ஆர். என்.ராஜேஷ்குமார்.
NAMAKKAL KING 24X7 B |29 Oct 2025 7:24 PM ISTபாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமகிரிபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகள் 500 நபர்களுக்கு ரூ.48.63 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை, ராஜபாளையம் கார்கூடல்பட்டி மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமகிரிபேட்டை ஒன்றியம், நாமகிரிபேட்டை மற்றும் சீராப்பள்ளி பேராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 500 பயனாளிகளுக்கு ரூ.48.63 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15.07.2025 முதல் 10.10.2025 வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது 3 கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுற்றுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என 1,07,755 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 71,720 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமகிரிபேட்டை ஒன்றியம், நாமகிரிபேட்டை மற்றும் சீராப்பள்ளி பேராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிக்கு ரூ.88,932/-மதிப்பில் தையல் இயந்திரம், காது கேட்கும் கருவி, வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.33,994/- மதிப்பில் தட்டு வெட்டும் கருவி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, புதிய குடிநீர் இணைப்பு, வருவாய்த்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 143 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், சான்று, பேரூராட்சிகள் துறையின் சார்பில் 45 பயனாளிகளுக்கு புதிய சொத்துவரி, குடிநீர் இணைப்பு ஆணை, மின்சாரத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு புதிய பதிவு அட்டை, 10 பயனாளிகளுக்கு ரூ.28,800/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 32 பயானாளிகளுக்கு ரூ.39,71,100/- மதிப்பில் பயிர், கால்நடை பராமரிப்புக் கடன், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 45 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, சுகாதாரத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டைகள் என மொத்தம் 500 பயனாளிகளுக்கு ரூ.48,62,826/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story


