ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டது.
Karur King 24x7 |23 Sep 2024 10:16 AM GMT
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில் மாற்றுத்திறனாளிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்கள் உள்பட மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சி முடித்த 8- மகளிர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பாக, பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story