பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது!
Pudukkottai King 24x7 |11 Aug 2024 3:56 AM GMT
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை கம்பன் நகரில் ஒரு கும்பல் கூட்டுக் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளதாக நகர காவல் துறைக்கு கிடைத்த தகவலின் படி, இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். பிரகாஷ், மணிகண்ட பிரபு, சுரேஷ் பாண்டியன், மஹாதேவன், இசக்கி பாண்டி ஆகிய 5 பேரிடம் 5 பெட்ரோல் குண்டு, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டு கைதாகினர். விசாரணையில், கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது.
Next Story