துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி

துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வருகிற 5ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் 153-வது பிறந்தநாள் விழா வருகிற 5ஆம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் வ.உ.சியின் பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். துறைமுகத்தை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் நேரடியாக துறைமுகத்தின் கிரீன் கேட் பகுதிக்கு வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பிறகு துறைமுகத்தை பார்வையிட அனுமதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story