அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்

அரசுப் பள்ளியில் அக்., 5ல் மாவட்ட கலை போட்டிகள்
போட்டிகள்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் அக்., 5ம் தேதி மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடக்கிறது. தஞ்சாவூர் மண்டலம், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் அக்.,5ம் தேதி காலை 9:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி முதல், இரண்டு, மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெறுபவர்கள், மாநில அளவிலான கலைப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வரும் அக்., 5ம் தேதி காலை 9:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, ஆதார் அட்டை நகலுடன் நேரில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9952401847 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story