சிறுமிக்கு பாலியல் தொல்லை பெயிண்டருக்கு 5 ஆண்டு சிறை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெயிண்டருக்கு 5 ஆண்டு சிறை!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44). பெயின்டர். கடந்த 22.06.21 அன்று புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் அருகே ஒரு வீட்டில் பெயின்ட்டிங் வேலை பார்த்தபோது, அங்கிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட் டத்தின்கீழ் பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் கோர்ட் டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரஜினி விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட பழனிச்சாமிக்கு 5 ஆண் டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story