சேலத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார்அபிநபு உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் போலீசார் கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் மகன் கார்த்திக் (வயது 25) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோன்று சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா தலைமையில் போலீசார் கோரிமேடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த கன்னங்குறிச்சியை சேர்ந்த வீரன் மகன் சிவகுரு (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் பிருந்தாவன் சாலை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அஸ்தம்பட்டியை சேர்ந்த மணி மகன் பூபாலகிருஷ்ணன் (21), செல்வம் மகன் ஜீவா (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் திருவாக்கவுண்டனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற பெருமாள் (48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story