கிருஷ்ணகிரி:குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு அட்டை வழங்கிய கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 09.06.2025 கே.பூசாரிப்பட்டி காலணியை சேர்ந்த எல்லப்பன், ஸ்ரீதேவி அவர்களின் குழந்தை செல்வி பேரரசி (வயது-4) லூப் கொலஸ்டிரமைன் நோய்க்கான சிகிச்சைக்கு உதவிடுமாறு மனு அளித்தின் பேரில் உடனடி நடவடிக்கையாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கி, மேல் சிகிச்சை மேற்கொள்ள தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட திட்ட அலுவலர் (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) செந்தில்நாதன் ஆகியோர் உள்ளனர்.
Next Story

