அரக்கோணம் அருகே 5 கிலோ புகையிலை பறிமுதல்

X
அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பே ரில் நேற்று சீனிவாசன் தலைமையிலான போலீசார் வேடல் பகு தியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான செந்தில் குமார் (வயது 35) மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

