ராமநாதபுரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

X
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கொத்திடல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28), இவர் சுமை துாக்கும் தொழிலாளி இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார் இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கவிதா சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.
Next Story

