கோவில்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி 5 மாணவர்கள் படுகாயம் !

கோவில்பாளையம் அருகே கார் மரத்தில் மோதி 5 மாணவர்கள் படுகாயம் !
X
கோவில்பாளையம் அருகே கோவை–சத்தி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
கோவில்பாளையம் அருகே கோவை–சத்தி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டிய நித்தின் கரு (22), சந்தோஷ்குமார் (20), ஆகாஷ்குமார் (22), கிஷோர் குமார் (22), இமயவரம்பன் ஆகிய 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story