ஆட்டோவின் மீது விழுந்த கட்டவுட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5பேர்
திருப்பாச்சூரில் நாளை மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் வைக்கப்பட்டிருந்த கட்டவுட் மழை காரணமாக காற்றின் வேகத்தால் சாலையில் ஆட்டோவின் மீது சாய்ந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் வழிநெடுகளும் சாலையின் இரு புறங்களிலும் கொடிகள் பேனர்கள் கட்ட அவுட்டுகள் கட்டப்பட்டு வரவேற்புக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நுழைவு வாயில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நுழைவு வாயில் என வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த நான்கு ராட்சச பேனர்கள் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையின் போது தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது இதில் ஆட்சியரகம் எதிரே ஆட்டோ மூன்று தனியார் பள்ளி குழந்தைகளுடன் ஐந்து பேருடன் நின்று கொண்டிருந்தபோது அதன் மீது விழுந்து நொறுங்கியது இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து பேரும் உயிர் தப்பினர்
Next Story





