திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் 50மேற்பட்ட பெண்கள் மனு அளிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் 50மேற்பட்ட பெண்கள் மனு அளிப்பு

புகார் மனு அளித்த பெண்கள்


Petition submitted by women above 50 to Tirupattur District Collector

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 6 வதுவார்டு குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதும்! குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் செய்யகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 6வது வார்டு சௌகத் அலி பேட்டை குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை.குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள சாலைகள் சிதலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது! மழைக்காலங்களில் குழியில் தண்ணீர் தேங்கி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து துறையை சேர்ந்த அரசு அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடும் அவதிக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியாரிடம் மனு கொடுத்தனர் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது உடனடியாக துறையை சேர்ந்த அதிகாரியிடம்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Tags

Next Story