காவிரியில் வெள்ளப்பெருக்கு 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு

சங்ககிரி: காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கு 50க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்து வெள்ள நீர் பொதுமக்கள் கடும் அவதி....
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பதால் சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.... கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் கர்நாடகா அணைகளில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் மேலான உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது . இதனால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவிரி கரையோர பகுதிகளான மேட்டாங்காடு, கல்வடங்கம், காவேரிப்பட்டி, புள்ளா கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் பயிரிடப்பட்ட வாழை, கரும்பு பருத்தி,கம்பு, சோளம், உள்ளிட்ட பயிறு வகைகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் காவேரிப்பட்டி மதிக்கிழான் திட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வெள்ளம் பாதிக்கப்படும் பகுதியில் அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளனர் .
Next Story