நடிகர் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சூர்யா ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்...

X
Rasipuram King 24x7 |23 July 2025 8:20 PM ISTநடிகர் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சூர்யா ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்...
நடிகர் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்வானது ராசிபுரம் தொகுதி பொறுப்பாளர் மோகன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். தொடர்ந்து முன்னதாக ஸ்ரீ ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் நகர நிர்வாகிகள் ஜீவா,ஸ்ரீதர், பிரபு,ராமன்,சபரி,ஆனந்த் மணிவேல், ஜெகதீப் என ஒன்றிய நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story
