புதுகையில் 50,000 லிட்டர் தண்ணீர் வீண்!

பொது பிரச்சனைகள்
புதுகை கீழ இரண்டாம் வீதி வடக்கு ராஜவீதி சந்திப்பில் காவிரி குடிநீருக்காக பதிக்கப்பட்ட குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. காலை முதல் இரவு வரை தண்ணீர் நிற்காமல் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் 50,000 லிட்டர் அளவுக்கு தண்ணீர் வெளியேறி இருப்பதாகவும் தெரிவித்தனர். குடிநீர் பஞ்சம் இருக்கும் நகர் பகுதியில் தண்ணீர் வீணாகுவதால் பொதுமக்களை கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story